பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சுரதா.கவிதைகள்

சித்திரங்கள் அத்தனையும் நிறத்தின் கூட்டல்

சேமிப்புத் திட்டமது பணத்தின் கூட்டல்

வித்தாரகாவியங்கள் பாட்டின் கூட்டல்

வெற்றிகளின் பிரசவந்தான் புகழின் கூட்டல்

姿 岑 零

அல்லிகளும் தாமரையும் குளத்தின் கூட்டல் ஆறுகளும் ஏரிகளும் நீரின் கூட்டல்

சொல்லுகின்ற மந்திரங்கள் பொய்யின் கூட்டல் சுகதுக்கம் இவ்விரண்டும் வாழ்வின் கூட்டல்

கழித்தல்

நெல்லின் கழித்தல் பதராகும்

நெருப்பின் கழித்தல் புகையாகும்.

பல்லின் கழித்தல் அழுக்காகும்

பழத்தின் கழித்தல் தோலாகும்.

வகுத்தல்

அறிஞர்களால் உருவான வகுத்த லாகும்.