பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

221



‘திருடாதே’ படத்திற்காக எனக்குக் கிடைத்த பணத்தை வைத்துத்தான் ‘கடவுளின் குழந்தை’ என்ற படத்தை நான் எடுத்தேன்.

அதன் பின் திருடாதே ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக ஒடியது. அதன் வெற்றிக்கு நான்தான் அஸ்திவாரம் என்ற உண்மை பலருக்குத் தெரியாமல் போயிற்று.

ஆனால் சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும். அதனால் திருடாதே நூறாவது வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

வாழ்க அவர் பண்பு!