இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிப்பெருங்கோ முடியரசன்
39
ஆதவன்
நினைஆதவன் என்று நினையாதவன் - ஒன்றும்
- நினை
மண்மேவும் அறியாமை இருள்யாவும் தொலைக்கும்
- நினை
ஆண்டவர் யார்உரிமை பூண்டவர் யாரென
அறியாமல் நினையாமல் அசையா திருந்தோம்
மூண்டெழும் போர்மறவன் போலெழுந் தார்ர்த்தனை
- நினை
கண்மூடி வழக்கங்கள் கடவுளர் விளக்கங்கள்
கதைகூறும் மயக்கங்கள் கயமையின் குழப்பங்கள்
மண்மூடிப் போகட்டும் மடமைகள் சாகட்டும்
- நினை
20-6-1979
20-6-1979