உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

41



போராட்ட வீரர்


போராட்டக் களங்கண்ட வீரர் - பாரில்

பொதுவான சமுதாய அறங்கண்ட சூரர்
- போராட்டக்

ஈரோட்டுத் தலந்தந்த பிள்ளை - எங்கள்
எழுச்சிக்கும் தன்மான உணர்ச்சிக்கும் தந்தை
வேரோட்ட முடியாமல் வேதக் - கொள்கை

வீணாகி மண்மீது பாழாகிச் சாயப்
- போராட்டக்

தீண்டாமை பின்னின் றிழுக்கும் - மாந்தர்
தெருவக்குள் நடமாட முடியாத வைக்கம்
ஆண்டோடி நேராகச் சென்றார் - சாதி

ஆணவப் போருக்குள் போராடி வென்றார்
- போராட்டக்

தேசியம் என்றிங்குக் கூறி - இந்தி
தேவையென் றோதினர் ஆட்சியில் ஏறிப்
பேசிய வாதத்தைக் கொன்றார் - இந்தி

பின்னிட்டுச் சென்றோடக் களமொன்று கண்டார்
- போராட்டக்

கலைகற்க உண்டிங்குச் சாதி - நின்று
கைகட்டிப் பணிசெய்ய உண்டிங்குச் சாதி
நிலைமுற்றும் அடியோடு மாறிக் - கல்வி

நீரெங்கும் பாய்ந்தோடக் களங்கண்டார் மோதிப்
- போராட்டக்

கற்பனைக் கோட்டைக்குள் சாமி - பொய்கள்
கட்டிக் கதைக்கப் படித்த ஆசாமி
விற்பனைப் பாட்டுக்குள் பூமி-கெட்டு

வீழாமற் காத்தவர் ஈ.வே.ரா.சாமி
- போராட்டக்