இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் கருணானந்தம்
677
வைக்கம் வீரர் என்று சிறப்புப் பெயர் பெற்ற அய்யா, தண்டாமை ஒழிப்புக்காக இறுதிவரை அரும்பாடு பட்டுள்ளார். |
ராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலி. |
சுயமரியாதைத் திருமணம் என்கிற சீர்திருத்த முறையை நாட்டுக்கு அறிமுகம் செய்தவரே அவர்தாம். பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசு அதற்குச் சட்ட வடிவம் தந்துள்ளது. |
பெரியார் திடலில் நடைபெற்ற திருமணக் காட்சிகள் திருச்சியில் ஊர்வலம். பெரியாரும் அண்ணாவும். |
பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்நாள் முழுவதும் போராடினார். தமிழ் நாட்டில் அவர் கால் படாத ஊரே இல்லை. 60 ஆண்டுப் பொது வாழ்வு அவருக்கு எண்ணற்ற தொண்டர்களைத் திரட்டித் தந்துள்ளது. |
ராஜாஜி ஹாலில் மக்கள் கியூவில் வருவது. மணியம்மையார், வீரமனரி, சம்பந்தம். சோகமாய் இருப்பது. |
பழமைக் கருத்துகளைச் சாடுவதிலும், பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதிலும் அவருக்குத் தணியாத ஆர்வம் உண்டு. அதற்காக அவர் ஓய்வின்றி உழைத்தார். |
பெரியார் தமது வேனில் செல்வது. மதுரையில் ஊர்வலம். தொண்டர்கள் அணி வகுப்பு. |
சமுதாய இழிவு ஒழிய வேண்டும் என்பதற்காக அவரும் அவரது தொண்டர்களும் கருப்புச்சட்டை அணிந்தனர். |
ராஜாஜி ஹாலில் கருஞ்சட்டை அணிந்திருக்கும் தொண்டர்களின் இறுதி வணக்கம். |
ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற மேல் நாடுகளுக்கும், மலேசியா போன்ற கீழ்த்திசை நாடுகளுக்கும் அவர் சென்று வந்துள்ளார். அவரது புரட்சிகரமான கருத்துக்களுக்காகப் பலமுறை சிறைத்தண்டனை பெற்றுள்ளார். |
இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்படுதல். |