பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

123


26. நாகம்மை என்னும் நாக இரத்தினம் மறைந்தது...

"பெண்களே வீரத்தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள்.

எதிர்காலத்தில் "இவள் இன்னாருடைய மனைவி" என்று அழைக்கப்படாமல்; "இவர் இன்னாருடைய கணவன்" என்று அழைக்கப்பட வேண்டும்."

- தந்தை பெரியார்

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் கடமை, இலட்சியம் என இரு பகுதிகள் உண்டு.

கல்வி, குடும்பம் என இருபகுதிகள் உண்டு.

கல்வி, குடும்பம், தொழில் எனக் கடமைகளைச் செய்து கொண்டே இலட்சியத்திற்காகப் பாடுபடுவது ஒருவகை -

தன் லட்சியம் ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று வாழ்வது ஒருவகை. ஈ.வெ.ரா இதில் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவராக வாழ்ந்தவர்.

- ஈ.வெ.ரா. எந்தக் கடமைகளைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல், லட்சியம் ஒன்றே வாழ்க்கை - தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதே அந்த லட்சியம் - என வாழ்ந்து காட்டியவர்.

இப்படியொரு லட்சிய புருஷனுக்கு மனைவியாக வாய்த்தவர் நாகம்மையார்.