பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

59


சட்டென்று முண்டாசை அவிழ்த்துக் கக்கத்தில் வைத்துக் கொண்டனர்.

காலில் இருந்த செருப்பை உதறிவிட்டு; ஒரமாக ஒதுங்கி நின்றனர்.

இவர்களின் இந்தச் செய்கைகள், தன்னிடமோ; தன் குடும்பத்தின் மீதோ கொண்டுள்ள அன்பின் காரணமாக; அல்லது மரியாதையின் நிமித்தமானது என்றால் இராமசாமி சந்தோஷப்பட்டிருப்பார் -

ஆனால் இதற்குக் காரணம் அதுமட்டுமல்ல, அவர்களது அயராத முழு உழைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு; அவர்களை மட்டும், தீண்டத்தகாதவர்கள் என்னும் முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கும் மேல் ஜாதியாரிடம் அவர்களுக்குள்ள பயமே இதற்குக் காரணம், என்று எண்ணியபோது இராமசாமியின் நெஞ்சு துடித்தது.


9. நெஞ்சிலே பட்ட வடு...

"மனிதன் உலகில் தன் சுயமரியாதையை, தன்மானத்தை, உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.

பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும். நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று கருதிக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவுக்கு ஒத்த எதுவும் எனக்கு விரோதம் அல்ல. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் எனக்கு நட்பும் அல்ல. இதுதான் எனது நிலை."

- தந்தை பெரியார்