பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் 15 ஆட்சியுட்பட்டதேயாயினும் இதனையே அவ்வேள்புல வேந்தர் 49 தலைமுறை தலைநகராக அமைத்து ஆண்டன ரென்றற்கு நூலும் சாசனமும் இல்லாமை நினையலாம். தெக்ஷிணை பதத்து மேற்பக்கத்துப் பலபத்ரபுரத்தையும் (பாலமி, வாதாபி) கீழ்பால் வெங்கியையும் தலைநகர்க ளாகக் கொண்டு வேள்புலச் சாளுக்கியர் வாழ்ந்தது சாசனங்களால் அறியலாம். அன்றியும் சாளுக்கியர் தெக்ஷிணைபதத்து வருவதற்கு முன்னே 59 தலைமுறை வடநாட்டில் வாழ்ந்ததாக, அவர் சாசனங்கள் ஒருபடியாகக் கூறுதல் காண்டலான். அவ்வேள் புலவரசர் விந்திய மலைக்குத் தெற்கட்டோன்றியவராகாமை தெளியலாம். இவள் புலச் சாளுக்கியர் சாசனங்களும், அவ்வேள்புலச் சாளுக்கியரிற் சிறந்த விக்கிரமாதித்தனைக் காச்மீரப் புலவர் பில்ஹணர் பாடிய சரிதமும், கபிலர் பாடிய வேளிர் வரலாறும் இவர் தோற்றம் வடபாலுண்டாய தென்று ஒரு படியாகக் கூறுதலுண்மை நன்கறியலாம். சாசனங்களும், விக்கிரமாதித்த சரிதமும் சாளுக்கிய வேந்தர் வடநாட்ட யோத்தியிலாண்டனரென்று கூறும். அயோத்தி நாட்டும் துவாரகா (sultanpur) ST GOT SOLD ஓரூருண்டு. அஃதுள்ள நாடு வேள்புலம் என்றற்கு ஆதார மின்மையாலும், அயோத்தி நாடு சூரிய குலத்தவர் ஆட்சி யாதலானும், சந்திரகுலத்தவராகிய சாளுக்கியருக்குரிய தாகாமையாலும் துணிதற்கில்லையென்க. மற்றச் சாசனம் சிலவும், பில்ஹணரும், சாளுக்கியர் முதலில் அயோத்தி யில் வாழ்ந்தவர் என்று கூறுதல், துவரை நாடாகிய வேள் புலத்தை ஆண்ட அரசர் தந்நாடு விட்டுச் சிலகாலம் அயோத்தியிலும் இருந்து வாழ்ந்தது பற்றியென்று நினை யலாம். இவர் அயோத்தி நாட்டிலே தோன்றியவரல்ல ரென்பது பில்ஹணர்க்கும் உடன்பாடாதல், இச்சாளுக் கியர் உற்பத்தியை ஸிந்து தீரத்தில்" (த்ரைலோக்ய பந்தோஸ் ஸீர ஸிந்து தீரே ப்ரத்யூஷ சந்தியாஸம யோப பூவ) வைத்துக் கூறுதலான் உணரலாம். இவா புலஸ்