பக்கம்:தமிழர் மதம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ககக தமிழர் மதம் வரோ, அனைவர்க்கும் பயன்படும் காட்சியியற் கருவிகளையும் இறும்பூதுகளையும் செய்தவர். ஆயினும், அவரைப் பேராயமும் போற்ற வில்லை; தி. மு. க. வும் போற்ற வில்லை . குடந்தை இராமானுசம் போன்றே, செங்கோட்டைப் பர். (Dr) சிவ சங்கர நாராயணப் பிள்ளையும், மேனாட்டார் போற்று மளவு கணிதத் திறவோர். ஆயினும், பிராமணர்க்குள்ள இன வுணர்ச்சி தமிழருக் கின்மையால், அவருக்கு விளம்பரம் இல்லா மலே போயிற்று. முகவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தமிழர், இரு கண் றும் தெரியாதவர், எத்தனைப் பேரெண்களையும் உள்ளத்திற் கொண்டு நால்வகைக் கணக்குஞ் செய்யவும், எத்து கணப் பேரெண்ணிற்கும் நான் மடி வேர் காணவும், வல்லவரா யிருந் பல்கலைக் கழக ஆள்வினைத் திறமையிலும் ஆங்கிலப் பேச் சாற்றலிலும், பர். (Dr.) வயவர் (Sir) ஆ. இலக்குமணசாமி முதலியாரினும் மிக்கவர், பிராமணர்க்குள் இருக்கவே முடியாது. இங்கனம் ஏனைத் துறைகளிலும் எத்தனையோ பேர் உள்ளனர். தமிழரின் தன்னலமும் பொருமையும் இன வெறுப்பும், பலர் தலை யெடுக்க வாய்ப்பில்லாமற் செய்து விடுகின்றன. பிராமணர் கல்வித் திறமையிற் சிறத்தற்கு இன்னொரு கரணி யமும் உண்டு. அது மறைவான இனக் கலப்பு. மக்களுள் நால் வேறு வரணம் போன்றே நால் வகைக் கலப் புக் குலமும் உள்ளன வென்று, மனு வின் குல வொழுக்க நூல் கூறுகின்றது. மேல் வரண ஆடவனுக்கும் கீழ்வாணப் பெண் டிற்கும் பிறந்தவன் அனு லோமன். கீழ் வரண ஆடவனுக்கும் மேல் வரணப் பெண்டிற்கும் பிறந்தவன் பிரதி லோமன், அனு லோம ஆடவனுக்கும் பிரதி லோமப் பெண்டிற்கும் பிறந்தவன் அந்தராளன் , பிரதி லோம ஆடவனுக்கும் அனு லோமப் பெண் டிற்கும் பிறந்தவன் விராத்தியன், மேல் மூவரணத்தாரும் தத் தமக்குக் கீழ்ப்பட்ட வரணங்களி லும் அல்லது வரணத்திலும் பெண் கொள்ளலா மென்று, மனு நூல் கூறுகின்றது. ஆயின், கீழ் மூவரணத்தாரும் தத்தமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/182&oldid=1429424" இலிருந்து மீள்விக்கப்பட்டது