பக்கம்:தமிழர் மதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் மூவிலைத் தாவியும் கிறித்தவப் பெண்டிரால் அணியப்படு கின்றன. இங்ஙனம் தெய்வப் பற்றால் அணியப்படும் உருக்க ளெல்லாம், பொன்னாலும் மணியாலும் இயன்று, அழகிற்காக அணியும் அணிகலங்க ளாகவே மாறிவிடுகின்றன. என்றும் இயற்கை வடிவிலேயே அணியப்பட வேண்டிய அக்க மணியும், ஒரோ ஒருவரிடைப் பொற் பூச்சுப் பெற்றுவிடுகின்றது. (௩) கடவுட் சமயம் ஊர் பேர் காலம் இடம் வண்ணம் வடிவம் பால் பருவம் முதலிய வரையறை யின்றி, எங்கும் நிறைந்து, எல்லார்க்கும் எல்லா வற்றிற்கும் பொதுவாய், எல்லாம் வல்லதாய், என்றும் மாறா திருக்கும் பரம் பொருளை உள்ளத்தில் அகக் கண்ணாற் கண்டு தொழுது, முக்கரணத் தூய்மையுடன் ஒழுகுவதே கடவுட் சமய மாம். பேர் என்றது, இயற் பெயரும் பண்பு பற்றிய சிறப்புப் பெய ரும் போன்றவற்றை. கடவுட் சமயம், இல்லறம் துறவறம் என்னும் இருவகை அற வாழ்க்கைக்கும் பொதுவாம். அதனாற் பெறும் பேரின்பமும், இம்மை மறுமையிரண்டிற்கும் பொதுவாம். இம்மையிற் பெறுவது உடலிருந்த வீடு என்றும், மறுமையிற் பெறுவது உடலிறந்த வீடு என்றும் பெயர் பெறும். எல்லா வற்றையும் கடந்து நிற்பவன் கடவுள். எல்லா வுல கங்களையும் ஆள்வதால் ஆண்டவன் என்றும், எங்குந் தங்கி யிருப்பதால் இறைவன் என்றும், எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிப்பதால் பகவன் என்றும், பெயர் பெறுவன். 'ஆண்ட வன்' முதலிய பிற பெயர்கள் பெருந் தேவ மதங்களிலும் வழங்கு வதால், கடவுட் சமயத்திற்குத் தனிச் சிறப்பாக வுரிய தெய்வப் பெயர் கடவுள் என்பதே. தெய்வம் என்னும் பெயர், இடத்திற் கேற்ப மூ வகைத் தெய் வத்தையுங் குறிக்கும். "தெய்வம் உணாவே>> (தொல். கூகூச) என்பதிற் சிறு தெய்வத்தையும், "நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்' (இராமலிங்க அடிகள் பாடல்) என்பதிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/69&oldid=1428930" இலிருந்து மீள்விக்கப்பட்டது