பக்கம்:தமிழர் மதம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் கடவுளியல்பை விளக்கும் பாடல்கள் "அங்கிங் கெனாதபடி யெங்கும்பிர காசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம் தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய் என்றைக்கு முள்ளதெதுமேற் கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுவது கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன வுருவெளிய தாகவும் கருதியஞ் சலிசெய்குவாம்." (தாயு.பரசிவ.க). ‘"பண்ணே னுனக்கொரு பூசையொரு வடிவிலே பாவித்தி றைஞ்சவாங்கே பார்க்கின்ற மலகுடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்கமனமும் நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனின் நாணுமென் னுளநிற்றி நீ நான்கும்பி டும்போ தரைக்கும்பி டாதலால் நான்பூசை செய்யல்முறையோ விண்ணே விணாதியாம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே யவித்தின் மூளையே கண்ணே கருத்தே என்எண்ணே யெழுத்தே கதிக்கான மோனவடிவே கருதரிய சிற்சபையி லானந்த நிருத்தமிடு கருணாகரக் கடவுளே." (ஷ் கருணா.சு).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/71&oldid=1428933" இலிருந்து மீள்விக்கப்பட்டது