பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

261

சொல்வழி கேட்டுத் தன் அரசை நடத்துவன். பிறப்பால் வேறுபாடு காணும் நான்கு குலத்தினுள்ளும் கீழ்க்குலத்தில் வந்தான் ஒருவன் கற்று வல்லனாயிருப்பின், மேற்குலத்தில் பிறந்தவன், இவன் கீழ்க்குலத்தான் என எண்ணாது அவன் பால் சென்று அவனை வழிபட்டு வாழ்வன்” எனக் கூறுகிறது அப்பாட்டு.


உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே :
பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின்பாலால் தாயும் மனம் திரியும் ;
ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக ! என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் ;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே”

-புறம் 183.


வரலாற்று ஆசிரியனுக்கு, இது. வரலாற்றுச் சிறப்பில்லா ஒர் எளியபாடல் , காவல பாவலனாம், இப்பாடலாசிரியர், தமிழ்நாட்டு அரசர்கள், மக்கள் ஆகியோர் உள்ளத்தில், ஆரிய நாகரீகம் நன்கு இடங்கொண்டு விட்டதற்குப் பிற்பட்ட காலத்தே வாழ்ந்தவராவர் என்பதொன்றே, இப்பாடலிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளக் கூடியது. பிராமண இனத்தவர், தாழ்ந்த இனத்தவரிடம் கல்வி கற்பது என்பதிவிருந்து, நாம் யூகிக்கக் கூடியது, பிராமணர்கள், தமிழ்ப்புலவர்களிடமிருந்து, தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றதை, இவ்வாசிரியர் ஒரு வேளை குறிப்பிடுகிறார் போலும் என்பதே.

இயற்பெயர் அறிய மாட்டாத, கூடகாரம் எனும் இடத்தில் உயிர் நீத்த மாறன் வழுதி என்ற மற்றொரு