தமிழ்ப் பழமொழிகள்
105
காய்ந்த வானம் பெய்தால் விடாது,
காய்ந்த வித்துக்குப் பழுது இல்லை. 7995
காய்ந்த வெள்ளத்தில் விழுந்த பூனை பச்சை வெள்ளத்தைக் கண்டாலும் பேடிக்கும்,
- (வெள்ளம்-நீர், பேடிக்கும்-அஞ்சும்.)
காய்ந்த வெற்றிலையையும் மெலிந்த ராஜாவையும் கைவிடாதே.
காய்ந்தால் காயும் கார்த்திகை.
காய்ந்தாலும் கவலை; பேய்ந்தாலும் கவலை.
காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ? 8000
காய்ந்து கெட்டது பிசானம்; காயாமல் கெட்டது கார்.
காய்ந்து போன கார்த்திகை வந்தால் என்ன? தீய்ந்து போன தீபாவளி வந்தால் என்ன? மகாராஜன் பொங்கல் வந்தால் மார்பு முட்டும் சோறு.
காய்ந்தும் கெடுத்தது வெயில்; பேய்ந்தும் கெடுத்தது மழை.
காய்ப் பாரத்தைக் கொடி தாங்காதா?
- (தாங்கும்.)
காய் பறிக்கக் கத்தரி நடு. 8005
காய் மகாரன் நெஞ்சிலே கொள்ளிக் கட்டையால் சுடவேண்டும்.
காய சித்தி பெற்றோர் சட்டை கழற்றுவது போல.
காயத்திரி ஜபத்துக்குச் சமர்த்தியும் சமைக்க மாட்டாள்.
காயம் என்ன கற்கண்டா? உயிர் என்ன தித்திப்பா?
- (உயிர் என்ன வெல்லமா?)
காயாகக் காய்த்துப் பூவாகப் பூத்ததாம். 8010
காயா? பழமா?
காயிலே கெட்டது கத்தரிக்காய்.
காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்.
- (காயும் கறியும்.)
காயும் பயிருக்குப் பெய்யும் மழை போல.
காயும் பழமும் கலந்தது போல். 8015