112
தமிழ்ப் பழமொழிகள்
காலம் செய்வதைக் காலன் செய்வான்.
காலம் செய்வதைக் கோலம் செய்யாது.
- (செய்யுமா?)
காலம் துக்கத்தை மாற்றும்.
காலம் போம்; வார்த்தை நிற்கும், கப்பல் போம்; துறை நிற்கும்.
காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது போல. 8155
காலம் வரும் வரைக்கும் யமன் காத்திருப்பான்.
- (பழமொழி நானூறு.)
காலமே எழுந்திருந்து காக்கை பார்க்கிறது ஆகாது.
காலமே எழுந்திருந்து காக்கை முகத்தில் விழித்தல் ஆகாது.
காலனுக்கு விளைச்சல் கூடுதல்.
- (நாஞ்சில் நாட்டு வழக்கு.)
கால க்ஷேபத்துக்குக் கூலிக்குக் குத்தினாலும் கமுக்கட்டு மயிர் வெளியே தெரியக்கூடாதாம். 8160
காலா காலத்தில் செபம் பண்ணினால் மேல் ஒரு பாவமும் இல்லை.
காலால் இடுவதைத் தலையால் செய்கிறான்.
- (இட்ட வேலையை.)
காலால் காட்டினதைக் கையால் செய்கிறது.
- (காலால் ஏவியதை.)
காலால் நடக்காமல் காற்றாய்ப் பறக்கிறது.
காலால் நடந்தால் காத வழி? தலையால் நடந்தால் எவ்வளவு தூரம்? 8165
காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக் கூடாது.
- (தள்ள முடியாது. அவிழ்க்கப்படாது.)
காலில் அழுக்கு இருந்தால் தலையில் அமேத்தியம் என்பார்.
காலில் கட்டினால் விருது; குப்பையில் கிடந்தால் துணி.
காலில் தைத்தது கண்ணிலே தைத்தது போல.
காலில் நகம் முளைத்த நாள் முதலாக. 8170
காலில் பட்டது கண்ணில் பட்டது போல.
- (தைத்தது போல.)
காலில் பட்டது கையிலும் படும்; மூக்கிலும் படும்.
காலில் பட்ட பிறகு கிரகசாரம் போய் விடாது.
- (போகாது.)