114
தமிழ்ப் பழமொழிகள்
காலைச் செவ்வானம் கடலுக்குப் பெய்யும்.
காலைச் செவ்வானம் கரம்பில் கட்டு; அந்திச் செவ்வானம் ஆற்றில் கட்டு.
காலைச் செவ்வானம் காலத்திலும் மழை இல்லை; அந்திச் செவ்வானம் அப்பொழுதே மழை.
காலைச் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும்.
- (அடர்த்த மழை.)
காலைத் தூக்குகிற கணக்கப்பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய். 8200
காலைத் தென்றல் மழையைக் காட்டும்; மாலைத் தென்றல் மழையை விலக்கும்.
காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர்.
காலைப் பனிக்கும் கண் விழிக்கும் ஒத்தது செல்வம்.
காலைப் பிடி என்றால் கழுத்தைப் பிடித்தாளாம்.
காலைப் பிடித்த சனி நடந்தால் ஒழிய விடாது. 8265
காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றியடிக்கும்.
காலைப் புல்லும் மாலைக் கல்லும் ஆளைக் கொல்லும்.
காலை மிதித்தால் தலையை மிதிப்பான்.
காலை மேகமும் கருந்தனி வெயிலும் மாலை உப்பலும் மழைதனில் இல்லையே.
காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது. 8210
- (ஆகாது.)
காலையில் எழுந்து காக்கை முகத்தில் விழிக்காதே.
காலையில் தயிர், கடும் பகலில் மோர், மாலையில் பால்.
காலையில் பூத்த மலர் மாலையில் வாடுவதைப் போல.
காலை வாடை, மாலை உப்பு, மழை அப்புறம்.
காலை விருத்தைத் தட்டாதே; கசடருடன் கூடித் திரியாதே, 8215
காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
காவல் காக்க வந்த குரங்கு கைத்துப்பாக்கி கேட்டதாம்.
காவல்தானே பாவையர்க்கு அழகு.
காவேட்டி ரங்கனுக்கு மேல் வெட்டி இரண்டாம்.
காவேட்டி ரங்கனுக்கு மேல் வேட்டி வெள்ளை. 8220