தமிழ்ப் பழமொழிகள்
129
குடம் தண்ணீரில் கொள்ளி வைத்தாற் போல.
குடல் அறுந்த கோழி எங்கே போகும்? 8535
குடல் அறுந்த நரி எவ்வளவு தூரம் ஒடும்?
- (எந்த மட்டும்.)
குடல் ஏற்றத்துக்குக் கோடி வைத்தியம்.
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
குடல் காய்ந்தால் நாய்க்கு நாற்றம் நறுமணம்.
குடல் காய உண்டால் உடல் காயம் ஆகும். 8540
குடல் கூழுக்கு அழுகிறதாம்; கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.
குடலில் கண்ட தினவு போல்.
குடலும் கூந்தலும் கொண்டது மட்டும் கொள்க.
- (கொள்கை.)
குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் அதுவும் கஜகர்ண வித்தை என்கிறான்.
குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் வாழைநார் என்பார். 8545
- (உருவிக் காட்டினாலும்.)
குடலைப் பிடுங்கி மாலையாய்ப் போட்டுக் கொள்வேன்.
குடிலைப் பிடுங்குகிறது ஓக்காளம்.
குடி இருக்க வந்தாயோ? கொள்ளி வைக்க வந்தாயோ?
குடி இருந்த வீட்டிலே கொள்ளி வைக்கிறவன்.
- (வீட்டுக்கே வைப்பதா?)
குடி இருந்து அறி; வழி நடந்து அறி. 8550
குடி இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப் பார்.
குடி இருப்பது குச்சு வீடு; கனாக் காண்பது மச்சு மாளிகை.
- (மச்சு வீடு.)
குடி இல்லா ஊரிலே அடியிடல் ஆகாது.
குடி இல்லா ஊரிலே ஒற்றைப் பணக்காரன்.
- (ஒற்றை விர்த்தகன். )
குடி இல்லா ஊரிலே குருவியும் பறக்காது. 8555
குடி இல்லா ஊருக்குக்குள்ள நரியே அரசன்.
குடி இல்லா விட்டால் குண்டுப் பெருச்சாளி உலவும்.
- (குடியில்லா வீட்டில்.)
குடி உடையானே முடி உடையான்.