பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தமிழ்ப் பழமொழிகள்


 கூப்பாடு போட்டால் சாப்பாடு வருமா?

(கூப்பிட்டால் சாப்பாடு ஆகுமா?)

கூப்பிடப் போன தாதி மாப்பிள்ளையைக் கைக்கொண்டாள்.

(மாப்பிள்ளை கூடப் போன கதை.)

கூர்ச்சம் போல நிற்கிறான். 9260

கூர்ந்து கவனித்தால் குதிரையும் கழுதையாகத் தெரியும்.

கூர்மத்தை நம்பிக் குடிகெட்டுப் போனேன்.

(கூர்மம்-கூர்மபுராணம்.)

கூர்மையாளனே நேர்மையாளன்.

கூரிய சொல்லான் ஆரினும் வல்லான்.

கூரியன் ஆயினும் வீரியம் பேசேல். 9265

கூருக்கு எதிர் உதைத்தால் ஆர் எழ வருத்தும்?

(சூர் எழ.)

கூரை இட்ட நாள் முதல் தாள் முதல் தாரையிட்டு அழுதாள்.

(கூறை.)

கூரை இல்லா வீடு வீடு ஆகுமா?

கூரை ஏறிக் கோழி பிடிக்காதவனா வானம் ஏறி வைகுந்தம் காட்டுவான்?

(கோபுரம் ஏறி வைகுந்தம் போகப் போகிறான். கோழி பிடிக்காத குருக்களா?)

கூரைக் காய் வைத்தியம் குணத்துக்கு ஏற்குமா? 9270


கூரை மீது ஓடும் குரங்கைப் பார்த்துக் கூட்டில் இருந்த குரங்கு விசாரித்ததாம்.

கூரைமேல் ஏறிக் குருவி பிடிக்காத குரு கைலாசத்துக்கு வழிகாட்டப் போனானாம்.

(வைகுந்தத்துக்கு, வானத்தைக் கீறி வழிகாட்டிப் போகிறாரோ?)

கூரைமேல் ஏறிக் கோணல் சுரைக்காய் அறுக்கத் தெரியாதவன் வானத்தைக் கிழித்து வைகுண்டம் காட்டப் போகிறானாம்.

கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் வரும்.

கூரையைப் பிரிக்கக் குரங்குக்குப் பிடி கடலை. 9275


கூலிக்காரன் பெண் சாதி குளி குளிக்கப் போகிறாளா? குப்பையிலே ஆமணக்கு முளைக்கப் போகிறதா?

(முளைக்காமல்.)

கூலிக்கு அறுத்தாலும் குறுணிக்கு அறுக்கலாம்; வீணனுக்கு