தமிழ்ப் பழமொழிகள்
171
கை காய்த்தால் கமுகு காய்க்கும்.
- (பாக்கு மரம்.)
கை கைக்குமா நெய் வார்க்க வரும்? 9480
கை கொடுத்துக் கொண்டே கடையாணி பிடுங்குகிறான்.
கைத்தது மானானாலும் கை ஏல்வை.
கைத் தாலி கழுத்தில் ஏறட்டும்.
கை தப்பிக் கண்ணில் பட்டால் கையைக் கண்டிப்பது உண்டா?
கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் மாமியாரே. 9485
கை நிறைந்த பணத்தை விடக் கண் நிறைந்த புருஷன்தான் வேண்டும்.
- (பொன்னிலும் விட. கணவன்தான். புருஷன்தான் மேல்.)
கைப்பண்டம் கருணைக் கிழங்கு,
கைப் பழத்தைக் கொடுத்துத் துறட்டுப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்?
- (பழத்தை விட்டு விட்டு, துறட்டுப் பழத்துக்கு ஆசைப்பட்டானாம்.)
கைப் பழத்தை நம்பி வாய்ப் பழத்தை வழியில் விட்டான்.
கைப் பறவையைப் பறக்க விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா? 9490
கைப் பிள்ளைக்கு முன் கயிற்றுப் பிள்ளை.
- (வயிற்றுப் பிள்ளை.)
கைப் புண்ணுக்குக் கண்ணாடியா?
கைப் பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கைப் பொருள் அற்றவனைக் கட்டின பெண்டாட்டியும் எட்டிப் பாராள்.
- (கட்டின பெண்ணும்.)
கைப் பொருள் அற்றால் கட்டுக் கழுத்தியும் பாராள். 9495
- (கட்டினவளும்.)
கைப் பொருள் இல்லாதவனைக் கள்வன் என்ன செய்வான்?
கைப் பொருள் இல்லா வழிப்போக்கனுக்குக் கள்வர் முன் படலாம்.
கைப் பொருள்தன்னிலும் மெய்ப் பொருள் கல்வி.
கைப் பொருள் போனால் கால் காசுக்கும் மதிக்கமாட்டார்கள்.
கைப் பொருள் போனாலும் கல்விப் பொருள் போகாது. 9500
கைப் பொன்னுக்குக் கண்ணாடியா?
கை பட்டால் கண்ணாடி.