232
தமிழ்ப் பழமொழிகள்
சீ
சீ என்கிற வீட்டில் நாயும் நுழையாது,
சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?
சீ என்றால் நாயும் திரும்பிப் பாராது. 10900
சீக்கிர புத்தி பலஹீனம்.
சீக்கிரம் பழுப்பது சீக்கிரம் உளுக்கும்.
சீக்கிரான் கறிவேப்பிலை; இழுத்துக்கொண்டு திரி பிள்ளை.
சீ சீ, இந்தப் பழம் புளிக்கும் என்றதாம் நரி.
சீ சீ என்கிறதும் இந்த வாய்தான்; சிவ சிவா என்கிறதும் இந்த வாய்தான். 10905
சீ சீ நாயே என்றால் பிள்ளை பிள்ளைதானே?
சீ சீ நாயே வாலைச் சுருட்டு.
சீட்டாளுக்கு ஒரு மோட்டாள்; செருப்புத் தூக்கிக்கு ஒர் அடைப்பைக்காரனா?
சீதனக் கள்ளி விருந்து அறியாள்.
சீதனம் வேதனை. 10910
சீதேவி தன்னுடனே செல்வத் திருப்பாற் கடலில் மூதேவி ஏன் பிறந்தாள் முன்?
சீதேவியுடன் கூட மூதேவி பிறந்தாற் போல.
சீதை அழகால் கெட்டாள்; திரோபதை சிரிப்பால் கெட்டாள்.
சீதை பிறந்தது லங்கை அழிய.
சீதை முகத்திலே சிரிப்பைக் கண்டேன். 10915
சீந்தி நகைத்துத் தெருவில் அலைய விட்டுப் பாந்தி நின்று வேடிக்கை பார்ப்பது போல.