44
தமிழ்ப் பழமொழிகள்
கண்ட இடம் கைலாசம்.
கண்ட கண்ட கோயிலெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டேன்.
காணாத கோயிலுக்குச் காணிக்கை நேர்ந்து வைத்தேன். 6665
கண்ட தண்ணீருக்கு நிறை வேளாண்மை, கண்டது எல்லாம் ஓடித் தின்னும் ஆடு; நின்று நின்று மேய்ந்து போகும் மாடு,
கண்டதில் பாதி சவுசிகம்; சீமையில் பாதி ஶ்ரீவத்ஸம்; பாதியில் பாதி பாரத்துவாஜம்.
- (இவை அந்தணர்களினுடைய கோத்திரங்கள்.)
கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்.
- (கேட்கப் பண்டிதன் ஆவான்.) கண்டது காட்சி; பெற்றது பேறு.
6670
கண்டது கை அளவு காணாதது உலகளவு.
- (கைம் மண் அளவு )
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
- (மூள்வது புகை.)
கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை.
கண்டது பாம்பு. கடித்தது சோளத்தட்டை
கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை. 6675
கண்டதும் மருதாணியைக் காலில் இட்டுக் கொண்டால் கொண்டவனுக்கு முன்னால் குதித்தோடிப் போகலாம்.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
- (கொண்டதே கொள்கை, உண்டதே மிச்சம்.)
கண்டதைக் காலை வாரி அடிக்கிறதா?
- (கண்டதைக் கொண்டு.)
கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே: காட்டு மரத்திலே நில்லாதே.
கண்டதைக் கேளா விட்டால் கொண்டவன் அடிப்பான். 6680
கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்,
கண்ட பாவனையா கொண்டை முடிக்கிறது?
கண்டம் இல்லாத எருமை தண்டம்.
கண்டம் ஒருத்தன் கழுத்து ஒருத்தன், துண்டம் ஒருத்தன்; துடை ஒருத்தன்.