பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தமிழ்ப் பழமொழிகள்



நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டு அடிக்கத் தெரியாதா?

நட்டுவன் பிள்ளைக்கு நாட்டியம் கற்க வேண்டுமா? 13520


நட்டுவன் பிள்ளைக்கு முட்டு அடிக்கத் தெரியாதா?

நட்டுவனுக்கு உண்டு தட்டுவாணித் தனம்.

(நட்டுவச்சிக்கு.)

நட்டுவனுக்கு நொட்டுப் பழக்குகிறாயா?

(கொட்டிக் காட்ட வேண்டுமா?)

நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காதவழி.

(மாட்டாதவனுக்கு.)

நடக்கக் கற்ற பிள்ளை தவழக் கற்றதாம்; தாயார் செய்த தவம். 13525


நடக்கப் பால்மாறிச் சிற்றப்பன் வீட்டில் பெண்கட்டிக் கொண்டானாம்.

நடக்க மாட்டாத தலவாடிக்கு நாலு பக்கமும் சவாரி.

நடக்க மாட்டாதவன் சிற்றப்பன் வீட்டிலே பெண் கேட்டாற் போல.

நடக்கிறது நடக்கட்டும், தெய்வம் இருக்கிறது.

நடக்கிற பிள்ளை தவழ்கிறது; தாயார் செய்த தருமம். 13530


நடக்கிற வரையில் நாராயணன் செயல்.

(நடந்தவரைக்கும்.)

நடக்கும் கால் இடறும்.

நடக்குந்தனையும் நாடங்கம்; படுத்தான்தான் பாயும் தானும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

நடக்கும் கால் தவறுதலிலும் நாத் தவறுதல் கெட்டது.

நடத்தை தப்பினவன் அண்ணனாகிலும் தம்பியாகிலும் நறுக்கு. 13535


நடந்த காலிலே சீதேவி; இருந்த காலிலே மூதேவி.

நடந்தபிள்ளை நகருகிறது.

நடந்த மட்டும் நடக்கட்டும்; நஷ்டத்துக்கு உத்தரவாதம் பண்ணப் போகிறீரா?

நடந்தவரை நமது செயல்; நாளை நடப்பது நாயன் செயல்.

நடந்தவன் காலிலே சீதேவி; இருந்தவன் காலிலே மூதேவி. 13540


நடந்தார்க்கு நாடு எங்கும் உறவு; கிடந்தார்க்குப் பாயே உறவு.

நடந்தால் நடை அழகி; நாவிலும் பல் அழகி.

நடந்தால் நாடு எல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.

(நாடு எல்லாம் செல்லும் உறவு இருந்தால் படுத்த தலையணையும் பாயும்கூட உறவில்லை.)