பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தமிழ்ப் பழமொழிகள்




நம்மை நம்ப வேண்டாம்; அம்மாளைத் தாலி வாங்கச் சொல். 13620


நம்மை வணங்குகிறவனை நாம் வணங்குகிறதா?

நம் வீட்டு விளக்கென்று முத்தம் இடலாமா?

நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.

நமக்கு எல்லாம் எப்போது அமாவாசை? சூத்திரர்களுக்கு எப்போது அமாவாசை?

(கோமுட்டிகன் கேட்பது.)

நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது. 13625


நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

(இல்லை.)

நமன் அறியாமல் உயிர் போய் விடுமா?

நமன் எடுத்துக் கொண்டு போகும் பொழுது நழுவி விழுந்தவன்.

நமன் வாயிலே மண் போட்டாயா?

நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான். 13630


நயத்தில் ஆகிறது பயத்தில் ஆகாது.

நய மொழியால் ஜயம் உண்டு.

நரசிம்மரை நரி மிரட்டியதாம்; நரியை நாய் மிரட்டியதாம்.

நரப்புப் புல்லைப் பிடுங்கினாலும் வரப்புப் புல்லைப் பிடுங்காதே.

நரா போகம் சரா போகம். 13635

(கரா போகம், சிலா போகம்.)


நரி அம்மணமாய்ப் போகிறதா?

நரி இடம் போனால் நல்லதா? வலம் போனால் நல்லதா என்றால் மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்பது.

நரி ஊரை விட்டுப் புலி ஊருக்குப் போனேன்; புலி ஊரும் நரி ஊர் ஆயிற்று.

நரி ஊளையிட்டால் சமுத்திரம் மட்டும்.

நரி எதிர்த்தால் சிங்கம். 13640


நரி ஒரு சாலுக்கு உழப் போனது.

நரிக்கு அதிகாரம் கொடுத்தால் கிடைக்கு ஒரு கிடாய் கேட்கும்.

(இடம் கொடுத்தால், நாட்டாண்மை கொடுத்தால், கிடைக்கு இரண்டு ஆடு.)

நரிக்கு உபதேசம் செய்தாற் போல.

நரிக்குக் கல்யாணம்; நண்டுக்குப் பிராம்மணார்த்தம்.

நரிக்குக் கொண்டாட்டம்; நண்டுக்குத் திண்டாட்டம். 13645