பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

129




நாய் நக்க நக்கக் கல் தேயும்.

நாய் நக்கிக் குளம் வற்றி விடுமா? 14135


நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?

நாய் நக்கிப் பிழைக்கும்; காக்கை கத்திப் பிழைக்கும்.

நாய் நக்கிப் பிழைக்கும்; கோழி குத்திப் பிழைக்கும்.

நாய் நக்கிய கற்சட்டி.

நாய் நக்கிய சட்டியை நாய்க்கே போடு. 14140


நாய் நக்கினாற் போல.

நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும்.

நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயைக் கடிக்கிறதா?

நாய் நல்லதானால் குணம் நல்லதாகுமா?

நாய் நல்ல வழி காட்டும்; பூனை பொட்டை வழி காட்டும். 14145


நாய் நன்றி மறவாது; பசு கன்றை மறவாது.

நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?

நாய் நுழையலாம்; நான் நுழையக் கூடாதாம்.

நாய் நொண்டி ஆனாலும் எச்சில் இலை கண்டால் ஓடத்தான் செய்யும்.

நாய்ப் பஞ்சம் நக்கித் தீரும்; கோழிப் பஞ்சம் கொத்தினால் போல. 14150

(கொத்தினால் தீரும்.)


நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும்.

நாய்ப் பிட்டத்தில் தேள் கொட்டினால் நாய்தான் நக்க வேணும்.

நாய்ப் பிட்டத்தில் தேன் வைத்த மாதிரி.

நாய்ப் பிறவி.

நாய்ப் பீயை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்? 14155


நாய்ப் புண்ணுக்குச் சாம்பல் மருந்து.

நாய்ப் புத்தியைச் செருப்பால் அடி.

நாய் பகைத்தால் நாழி அரிசியோடே; பேய் பகைத்தால் ஒரு பிள்ளையோடே.

நாய் பட்ட பாடு தடிக் கம்புக்குத் தெரியும்.

நாய் பல்லைக் கெஞ்சுகிறாற் போல. 14160


நாய் பிடிக்க மனிதன் குரைத்தானாம்.

நாய் பிடுங்கினாற் போல.