14
தமிழ்ப் பழமொழிகள்
செல்லன் சொல்லுக்கு அஞ்சான்; அழகன் நடைக்கு அஞ்சான்.
செல்லாக் கோபம் பொறுமைக்கு அடையாளம்.
செல்லாத காசு என்றைக்கும் செல்லாது. 11430
- (எங்கும். பணம்.)
செல்லாத பணம் என்று எண்ணாதே; செட்டியார் இருக்கிறார்; காட்டிக் கொள்.
செல்லிக்குச் சிரங்கு; சிறுக்கிக்கு அரையாப்பு; பார்க்க வந்த பரிகாரிக்குப் பக்கப் பிளவை.
- (பரிகாரி-வைத்தியன்.)
செல்லுகளால் தினந்தோறும் வளர்க்கப் படாத புற்றுப் போல்.
- (செல்-கறையான்.)
செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?
செல்லும் செல்லாததற்குச் செட்டியாரைக் கேள். 11435
- (செட்டியார் இருக்கிறார். இது ஒரு கதை.)
செல்லும் பொழுது செலுத்துவாய் சிந்தையை.
செல்வச் செருக்கினால் திரட்டுப்பால் குமட்டுகிறது.
செல்வ நிலையில் சேட்டன் கீழ்க் குரு.
- (சேட்டன்-தமையன்.)
செல்வப் பெண் சீரங்க நாயகிக்குச் சீதனம் வந்ததாம் வறையோடு.
செல்வப் பொருள் கொடுத்தால் குறையும்; கல்விப் பொருள் குறையுமோ? 11440
செல்வம் உண்டாகும் காலம் செய்கை உண்டு; வல்லமை உண்டு.
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே.
- (குமர குருபரர் வாக்கு.)
செல்வம் சகடக்கால் போல வரும்.
செல்வம் சீர் அழியுமா?
செல்வம் சீரைக் கெடுக்கும். 11445
செல்வம் செருக்குகிறது; காசுக்கு வழி இல்லை.
செல்வம் செருக்குகிறது; வாசற்படி வழுக்குகிறது.
- (சறுக்குகிறது.)
செல்வம் சொல்லுக்கு அஞ்சாது.
செல்வம் தொகற்பால போழ்தே தொகும்.
- (பழமொழி நானூறு)
செல்வம் நிலைகவ; சேட்டன் கீழ் இரு. 11450
செல்வம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டபமும் செல்லும்.
செல்வமும் சீரும் வளர்த்தாளோடே போயின.