பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ்ப் பழமொழிகள்


செல்லன் சொல்லுக்கு அஞ்சான்; அழகன் நடைக்கு அஞ்சான்.

செல்லாக் கோபம் பொறுமைக்கு அடையாளம்.

செல்லாத காசு என்றைக்கும் செல்லாது. 11430

(எங்கும். பணம்.)


செல்லாத பணம் என்று எண்ணாதே; செட்டியார் இருக்கிறார்; காட்டிக் கொள்.

செல்லிக்குச் சிரங்கு; சிறுக்கிக்கு அரையாப்பு; பார்க்க வந்த பரிகாரிக்குப் பக்கப் பிளவை.

(பரிகாரி-வைத்தியன்.)

செல்லுகளால் தினந்தோறும் வளர்க்கப் படாத புற்றுப் போல்.

(செல்-கறையான்.)

செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?

செல்லும் செல்லாததற்குச் செட்டியாரைக் கேள். 11435

(செட்டியார் இருக்கிறார். இது ஒரு கதை.)


செல்லும் பொழுது செலுத்துவாய் சிந்தையை.

செல்வச் செருக்கினால் திரட்டுப்பால் குமட்டுகிறது.

செல்வ நிலையில் சேட்டன் கீழ்க் குரு.

(சேட்டன்-தமையன்.)

செல்வப் பெண் சீரங்க நாயகிக்குச் சீதனம் வந்ததாம் வறையோடு.

செல்வப் பொருள் கொடுத்தால் குறையும்; கல்விப் பொருள் குறையுமோ? 11440


செல்வம் உண்டாகும் காலம் செய்கை உண்டு; வல்லமை உண்டு.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே.

(குமர குருபரர் வாக்கு.)

செல்வம் சகடக்கால் போல வரும்.

செல்வம் சீர் அழியுமா?

செல்வம் சீரைக் கெடுக்கும். 11445


செல்வம் செருக்குகிறது; காசுக்கு வழி இல்லை.

செல்வம் செருக்குகிறது; வாசற்படி வழுக்குகிறது.

(சறுக்குகிறது.)

செல்வம் சொல்லுக்கு அஞ்சாது.

செல்வம் தொகற்பால போழ்தே தொகும்.

(பழமொழி நானூறு)

செல்வம் நிலைகவ; சேட்டன் கீழ் இரு. 11450


செல்வம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டபமும் செல்லும்.

செல்வமும் சீரும் வளர்த்தாளோடே போயின.