பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

159



நெருப்பை நம்பினாலும் நீரை நம்பக்கூடாது.

நெருப்பைப் புழுப் பற்றுமா? 14835


நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறான்.

(கட்டிக்கொண்டிருப்பது போல.)

நெருப்பை மடியில் முடிகிறதா?

(முன்றானையில்.)

நெல் அல்லாதது எல்லாம் புல்.

நெல் இருக்கப் பொன்; எள் இருக்க மண்.

நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சே. 14840


நெல் ஏறக் குடி ஏற.

நெல் குறுணி; எலி முக்குறுணி.

நெல்லால் அடித்தால் கல்லால் அடிப்பான்.

நெல்லிக்காய் மூட்டை.

நெல்லிக்காயைத் தின்று தண்ணீர் குடித்தால் உடன் பிறந்தவர்களுடன் பேசினமாதிரி இருக்கும்; மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாருடன் பேசினமாதிரி இருக்கும். 14845


நெல்லுக்கடை மாடு கன்று போடட்டும்.

நெல்லுக் காய்ச்சி மரம் என்று கேட்டவன் போல.

(நெல்லுக் காய்க்கிற.)

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.

நெல்லுக்குத் தாளும் பெண்ணுக்குத் தோழனும்.

நெல்லுக் குத்தினவனுக்கு நேர் உடன் பிறந்தாள். 14850

(உறவு இல்லை என்ற குறிப்பு.)


நெல்லுக் குத்துகிறவளுக்குக் கல்லுப் பரீட்சை தெரியுமா?

நெல்லுக்கு நேரே புல்.

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

நெல்லுக்குள் அரிசி இருக்கிறது என்றானாம்.

நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது; எள்ளுக்குள்ளே எண்ணெய் இருக்கிறது. 14855


நெல்லுடன் பதரும் சேர்ந்தே இருக்கும்.

நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக்கூடுமா?

நெல்லூர் மாடுபோல இருக்கிறாள்.

நெல்லைக் காணாத காக்கை அரிசியைக் கண்டாற் போல.

நெல்லை விற்ற ஊரில் புல்லை விற்பதா? 14860