தமிழ்ப் பழமொழிகள்
159
நெருப்பை நம்பினாலும் நீரை நம்பக்கூடாது.
நெருப்பைப் புழுப் பற்றுமா? 14835
நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறான்.
- (கட்டிக்கொண்டிருப்பது போல.)
நெருப்பை மடியில் முடிகிறதா?
- (முன்றானையில்.)
நெல் அல்லாதது எல்லாம் புல்.
நெல் இருக்கப் பொன்; எள் இருக்க மண்.
நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சே. 14840
நெல் ஏறக் குடி ஏற.
நெல் குறுணி; எலி முக்குறுணி.
நெல்லால் அடித்தால் கல்லால் அடிப்பான்.
நெல்லிக்காய் மூட்டை.
நெல்லிக்காயைத் தின்று தண்ணீர் குடித்தால் உடன் பிறந்தவர்களுடன் பேசினமாதிரி இருக்கும்; மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாருடன் பேசினமாதிரி இருக்கும். 14845
நெல்லுக்கடை மாடு கன்று போடட்டும்.
நெல்லுக் காய்ச்சி மரம் என்று கேட்டவன் போல.
- (நெல்லுக் காய்க்கிற.)
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.
நெல்லுக்குத் தாளும் பெண்ணுக்குத் தோழனும்.
நெல்லுக் குத்தினவனுக்கு நேர் உடன் பிறந்தாள். 14850
- (உறவு இல்லை என்ற குறிப்பு.)
நெல்லுக் குத்துகிறவளுக்குக் கல்லுப் பரீட்சை தெரியுமா?
நெல்லுக்கு நேரே புல்.
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
நெல்லுக்குள் அரிசி இருக்கிறது என்றானாம்.
நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது; எள்ளுக்குள்ளே எண்ணெய் இருக்கிறது. 14855
நெல்லுடன் பதரும் சேர்ந்தே இருக்கும்.
நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக்கூடுமா?
நெல்லூர் மாடுபோல இருக்கிறாள்.
நெல்லைக் காணாத காக்கை அரிசியைக் கண்டாற் போல.
நெல்லை விற்ற ஊரில் புல்லை விற்பதா? 14860