பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தமிழ்ப் பழமொழிகள்



பத்தியம் பத்து நாள்; இளம் பிள்ளை இரண்டு மாதம்.

பத்திய முறிவுக்குப் பாகற்காய்.

பத்திரம், என் வாசலில் அடி வைக்காதே.

(கால்)

பத்திரிகை படியாதவன் பாதி மனிதன்.

பத்தில் குரு வந்தபோது பரமனும் பிச்சை எடுத்தான். 15430


பத்தில் பசலை; இருபதில் இரும்பு.

(இரும்பு)

பத்தில் பார்வை; இருபதில் ஏற்றம்; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம்.

பத்தில் விழுந்த பாம்பும் சாகாது.

பத்தினி என்ற பெயரோடே பத்துப் பிராயம் கழித்தாளாம்.

பத்தினிப் பானை படபடவென வெடிக்கிறது. 15435


பத்தினிப் பெண்ணைப் பதற்றமாய்ப் பேசாதே.

பத்தினி படாபடா என்றாளாம், பானைசட்டி லொட லொட என்றனவாம்.

பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் கெட்டதும்.

(பட்டதும்.)

பத்தினியைப் பஞ்சணையில் வைத்துக் கொள்.

பத்தினி வாக்குப் பலிக்கும் 15440


பத்தினி வாக்குக்குப் பழுது வராது.

பத்தினி வாக்கும் உத்தமி வாக்கும் பலித்தே விடும்.

பத்து அடி பிள்ளை, எட்டு அடி வாழை.

(பிள்ளை-தென்னம்பிள்ளை.)

பத்து அரிசியும் வேகவில்லை, பாவி என் பிராணனும் போக வில்லை.

(பிராமணனும்)

பத்து ஆண்டிக்கு ஒருவன் பாதக் குறட்டாண்டி, 15445


பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம்; அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம்.

பத்து இறுத்த பின்பு பாரச் சந்தேகம் தீர்ந்தது.

பத்து இறுத்தாலும் பராச் சத்தேகம் தீராது.

பத்து உள்ள என் தம்பி, பணமுள்ள என் தம்பி, காசுள்ள என் தம்பி, கணக்கப் பிள்ளை உன்தம்பி.