பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சே


சே என்றதற்கு நாய் சேலை கட்டாமல் அலைகிறது.

சேடனுக்கு ஏன் குரங்கு?

(சேடன்-நெசவு வேலை செய்கிறவன்.)

சேடனுக்கு ஏன் குரங்குப் புத்தி? சேற்றில் கிடப்பவனுக்கு ஏன் சோமக் கட்டு? 11490


சேணியன் குடுமி சும்மா ஆடுமா?

சேணியன் நூலை விற்பான்; செளராஷ்டிரன் சேலையை விற்பான்.

சேணியனுக்கு ஏன் குரங்கு?

சேணியனைக் கெடுக்கச் சாண் குரங்கு பற்றாதா?

(போதும்.)

சேத நினைவுக்குப் பூதம் சிரிக்கும். 11495


சேப் பணத்துப் பட்ட ஈப் போல.

சேப்பு ஆத்தாள் வண்டவாளம் போய்ப் பார்த்தால் தெரியும்.

சேம்பு கொய்யச் சிற்றரிவாள் ஏன்?

(வேணுமா?)

சேம்பு சொறியும்; வேம்பு கசக்கும்.

சேயின் முகம் பார்க்கும் தாயின் முகம் போல. 11500


சேர் இடம் அறிந்து சேர்.

சேர்க்கைக்குத் தக்க பழக்கம்.

சேர்க்கை வாசனையோ? இயற்கை வாசனையோ?

சேர்த் துரைக்கு மணங்குச் சேவகன்.

சேர்த்து வைத்துப் பசுக் கறக்கலாமா? 11505

(பால் கறக்கலாமா?)


சேர்ந்தவர் என்பது கூர்ந்து அறிந்த பின்.

சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை.

சேர இருந்தால் செடியும் பகை; தூர இருந்தால் தோட்டியும் உறவு.

(சேடியும் பகை.)