பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தமிழ்ப் பழமொழிகள்



பருத்தி பட்ட பாடு எல்லாம் படுகிறது.

பருத்தி புடைவை புடைவையாய்க் காய்த்தாற் போல.

பருத்தி புடைவையாய்க் காய்த்தால் எடுத்து உடுத்தல் அரிதா?

பருத்தி விதைக்கும் போதே, அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்றாளாம்.

பருந்தின் கழுத்தில் பவளத்தைக் கட்டினால் கருடன் ஆகுமா? 15575


பருந்து எடுத்துப் போகுதென்று பார்க்க வந்தனையா? இந்தக் குரங்கு எடுத்துப் போடுதே கோவிந்தா!

பருப்பிலே நெய் விட்டது போல.

(வார்த்தது போல.)

பருப்பு இல்லாமல் கல்யாணமா?

(கல்யாணம் உண்டா?)

பருப்புச் சோற்றுக்குப பதின்காதம் வழி போவான்.

பருப்புத் தின்ற பண்டிதன் போல். 15580


பருப்புத் தின்னிப் பார்ப்பான்.

பருப்புத் தேங்காய் இல்லாமல் கல்யாணமா?

பருப்பும் அரிசியும் கலந்தாற்போலப் பெண்ணும் பிள்ளையும்.

பருப்பும் பச்சரிசியும்.

பருமரத்திலே சிறு காய் எடுத்தாற் போல. 15585


பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.

பருமரத்தைச் சேர்ந்தால் பல்லியும் பொன் நிறம் ஆகும்.

பருவத்தில் பெற்ற சேயும் புரட்டாசி பாதிச் சம்பா நடுகையும்,

பருவத்தே பயிர் செய்.

பருவத்தோடு ஒத்து வாழ். 15590


பருவம் தப்பினால் பனங்கிழங்கும் நாராகும்.

(பருவத்துக்கு.)

பருவம் வந்தால் பன்றிக் குட்டியும் நன்றாகும்.

பரோபகாரம் இதம் சரீரம்.

பரோபகாரமே பெரிது.

பல் அசைந்தால் பசி தீரும். 15595

(ஆறும்.)


பல் ஆடப் பசி ஆறும்.

பல் இழந்தான், சொல் இழந்தான்.

பல் முந்தினால் சொல் பிந்தும்; சொல் முந்தினால் பல் பிந்தும்.

(யாழ்ப்பாண வழக்கு.)