பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

197



பறக்கிற பட்சிக்கு எது தூரம்?

பறக்கும் காகத்துக்கு இருக்கும் கொம்பு தெரியாது.

(தெரியாதா?)

பறக்கும் குருவிக்கு இருக்கும் கொம்பு தெரியாது; பரதேசிக்குத் தங்கும் இடம் தெரியாது.

(குருவிக்கு இருக்கும் இடம்)

பறக்கையில் தெரியாதா காக்கையின் முடுக்கு. 15760

(புடுக்கு.)


பறங்கிக்காய் அழுகலைப் பசுவுக்குப் போடு; பசுவுத் தின்னா விட்டால் பார்ப்பானுக்குக் கொடு.

பறங்கிக் காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்தது போல,

பறங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாஸ்திரமும்?

பறங்கி நல்லவன்; பிரம்பு பொல்லாதது.

பறந்து பறந்து பாடுபட்டாலும் பகலுக்குச் சோறு இல்லை. 15765


பறந்து போகிற எச்சில் இலைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல,

(பாறாங்கல்லை.)

பறந்து போகிற காகமும் பார்த்து நின்று பறந்து போகும்.

பறப்பான் பயிர் இழந்தான்; அறக் காஞ்சி பெண்டு இழந்தான்.

பறவை பசித்தாலும் எட்டிக் கனியைத் தின்னாது.

பறிகொடுத்த கட்டில் பயம் இல்லை. 15770


பறி நிறைந்தால் கரை ஏறுவேன்.

பறைக்குடி நாய் குரைத்தால் பள்ளக்குடி நாயும் குரைக்கும்.

பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தாலும் பேச்சிலே ஐயே என்னுமாம்.

பறைச்சி பெண் ஆனாலும் துடைத்துவிட்டாற் போல் இருக்கிறது.

பறைச்சி முலை அழகு; பாப்பாத்தி தொடை அழகு; கோமுட்டிச்சி குறி அழகு. 15775


பறைச்சி வெற்றிலை போட்டால் பத்து விரலும் சுண்ணாம்பு.

பறைச்சேரி அழிந்தால் அக்கிரகாரம்.

பறைச்சேரி நாய் குரைத்தால் பள்ளச்சேரி நாயும் குரைக்கும்.

பறைச்சேரி மேளம் கல்யாணத்துக்குக் கொட்டும்; கல்லெடுப்புக்கும் கொட்டும்.

பறைச்சேரியில் முளைத்த வில்வமரம் போல. 15780

(பறைத் தெருவில் வில்வம் முளைத்தது போல.)