தமிழ்ப் பழமொழிகள்
245
பூதலம் தன்னில் இவ்வூர் புண்ணியம் என் செய்ததோ?
பூதலம் யாவும் போற்றும் முச்சுடர்.
பூப்பட்டால் கொப்புளிக்கும் பொன்னுத் திருமேனி.
பூ மலர்ந்து கெட்டது; வாய் விரிந்து கெட்டது.
பூமி அதிர நடவாத புண்ணியவான். 16885
பூமி ஆளலாம் என்று மனப்பால் குடிக்கிறது போல,
பூமி கிருத்தி உண்.
பூமியில் வரகு கொடுத்தால் கொடுக்கலாம்; இல்லாவிட்டால் ராஜன் கொடுக்க வேண்டும்.
பூமியைப் போலப் பொறுமை வேண்டும்.
பூர்வ சேஷ்டை போச்சுதோ, இருக்கிறதோ என்று பார்த்தானாம். 16890
பூர்ளோத்தரம் மேரு சாத்திரம் போல் இருக்கிறது.
பூராடக்காரன் ஊசாடத் தீரும்.
- (யாழ்ப்பாண வழக்கு)
பூராடக்காரனோடு போராட முடியாது.
பூராடக்காரி ஊசாட ஊசாடப் பொருள் தொலையும்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
பூராடத்தன் அப்பன் ஊராடான். 16895
பூராடத்திலே பிறந்தவளுக்கு நூல் ஆகாது.
பூராடத்தின் கழுத்தில் நூல் ஆடாது.
பூராயமாய் வேலை கற்றுக் கொள்ள வேண்டும்.
பூரி இல்லாத கல்யாணமா?
பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். 16900
பூலு அம்மின ஊருல கட்டிலு அம்ம தகுனா?
- (-பூவிற்ற ஊரிலே கட்டை விற்கத் தகுமா? தெலுங்கு.)
பூலோகத்தார் வாயை மூடக் கூடுமா?
பூலோக முதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்.
பூவரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?
பூவிரிந்து கெட்டது; வாய் மலர்ந்து கெட்டது. 16905
பூவிலே பூ பூனைப் பூ.
பூ விழுந்த கண்ணிலே கோலும் குத்தியது.
பூ விற்ற கடையிலே புல் விற்றது போல.