பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

85


தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி.

தூங்குகிற நரிக்கு இரை கிடையாது.

(உணவு.)

தூங்குகிற நாய் தூங்கட்டும். 13070


தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினதுபோல.

(எழுப்புவானேன்?)

தூங்குகிற வரிக்காரனை எழுப்பி விட்டால் போன வருஷத் தீர்வையும் கொடுத்துவிட்டுப் போ என்பான்.

தூங்குகிறவன் துடையிலே சுப்பல் எடுத்துக் குத்தினாற்போல,

(தூங்குகிறவன் பிட்டத்திலே.)

தூங்குகிறவனை எழுப்புவானேன்? அவன் தொண்ணூறு பணம் குறைந்தது என்பானேன்?

தூங்குகிறவனைத் தட்டி எழுப்பி அத்தாளம் இல்லை என்றாற் போல. 13075


(அத்தாளம் - இரவு உணவு.)

தூங்கும் புலியை வால் உருவி விட்டாற் போல.

தூங்கு மூச்சி மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம்.

தூங்குவது சிறிய தூக்கம்; போவதே பெரிய தூக்கம்.

தூண்டா விளக்குப் போல.

தூண்டில் காரனுக்கு மிதப்பிலே கண். 13080

(தக்கையிலே கண்.)


தூண்டில் நுனி இரைக்கு ஆசைப்பட்டு மீன் உயிர் இழப்பது போல.

தூண்டில் போட்டவனுக்குத் தக்கைமேல் கண்.

தூண்டில் போட்டு ஆனை பிடிக்கும் புத்திசாலி.

தூண்டிலில் அகப்பட்ட மீன் துள்ளி நத்தினால் விடுவார்களா?

தூண்டிலைப் போட்டு வராலை இழுக்கிறது. 13085


தூண்டின விரல் சொர்க்கம் பெறும்.

தூணி என்கிற அகமுடையானாம்; தூணிப்பதக்கு என்கிற அகமுடையாளாம்; முக்குறுணி என்று பிள்ளை பிறந்தால் மோதகம் பண்ணி நிவேதனம் செய்தார்களாம்.

தூணில் புடைவையைக் கட்டினாலும் தூக்கிப்பார்ப்பான் தூர்த்தன்.

தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்.

தூணிலும் உண்டு; துரும்பிலும் உண்டு; சாணிலும் உண்டு; கோணிலும் உண்டு. 13090