பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

461


தாய்க்குப் பின்னால் அந்தத் தோட்டம், முன்புறத்தில் இடுகாடு. அவள் நின்ற இடத்திலிருந்து வலது புறமாக சுமார் எழுபது அடி தூரத்தில் சிறைச்சாலை. இடுகாட்டுக்கு அருகே ஒரு சிப்பாய் ஒரு குதிரையை நடத்திக் கூட்டிக்கொண்டு போனான். அவனுக்கு அருகே இன்னொரு சிப்பாய் தரையைக் காலால் மிதித்துக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும், சிரித்துக்கொண்டும், சீட்டியடித்துக்கொண்டும் நின்றான். சிறைச் சாலையின் அருகே ஆள் நடமாட்டமே இல்லை.

அவர்களைக் கடந்து, இடுகாட்டை வளைந்து சூழ்ந்த வேலிப்புறமாக, தாய் மெதுவாக நடந்து சென்றாள். போகும்போது முன்னும் பின்னும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே சென்றாள். திடீரென அவளது கால்கள் பலமிழந்து உழன்றன. தரையோடு தரையாய் உறைந்துபோன மாதிரி கனத்து விறைத்தன. ஒரு மூலையிலிருந்து விளக்கேற்றுபவர்கள் வருவதுபோலவே தன் தோள்மீது ஓர் ஏணியைச் சுமந்துகொண்டே அவசர அவசரமாகக் குனிந்து நடந்து வந்தான் ஒருவன். பயத்தினால் கண்கள் படபடக்க; தாய் அந்தச் சிப்பாய்களைப் பார்த்தாள். அவர்கள் ஓர் இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்; குதிரை அவர்களைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. ஏணியோடு வந்துகொண்டிருந்த அந்த மனிதனை அவள் பார்த்தாள். அவன் அதற்குள் ஏணியைச் சுவர் மீது சாய்த்து அதன்மீது நிதானமாக ஏறிக்கொண்டிருந்தான். அவன் சிறைச்சாலை முகப்பைப் பார்த்துக் கையை ஆட்டிவிட்டு, விறுவிறென்று கீழிறிங்கி, சிறைச்சாலையின் மூலையைக் கடந்து சென்று மறைந்து போனான். தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது. ஒவ்வொரு விநாடியும் நிலையாய் நிற்பதுபோல் தோன்றியது. சிறைச்சாலையின் சுவர் கறை படிந்து, ஆங்காங்கே காரை விழுந்து, உள்ளுக்குள் உள்ள செங்கல்லை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அதன் நிறம் மாறிப்போன கறுத்த பின்னணியில் அந்த ஏணி அவ்வளவாகக் கண்ணுக்குத் தெரியவில்லை. திடீரென்று ஒரு கரிய தலை சிறைச் சுவருக்கு மேலே தெரிந்தது. அப்புறம் அந்த உருவம் சுவரின்மீது தத்தித் தவழ்ந்து, மறுபுறம் இறங்கத் தொடங்கியது. அடுத்தாற்போல் ஒரு கோணல்மாணலான தொப்பி தலையை நீட்டியது. ஒரு கரிய கோணல் பூமியிலே உருண்டு விழுந்தது. மறு கணம் அது எழுந்து நின்று மூலையை நோக்கி ஓடி மறைந்தது. மிகயீல் நிமிர்ந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான், தலையை ஆட்டிக்கொண்டான்...”

"ஓடு! ஓடு!” என்று காலைத் தரையில் உதைத்துக்கொண்டே மெதுவாகக் கத்தினாள் தாய்.

அவளது காதுகளில் கிண்ணென்று இரைந்தது: பலத்த கூச்சல்களை அவள் கேட்டாள். சுவரின்மீது மூன்றாவது தலையும் தோன்றியது. தாய்