இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆலய உரிமை
(ஆறுமுகவடி வேலவனே கலியாணமும் செய்யவில்லை)
என்ற காவடிச் சிந்தின் மெட்டு.
கண்ணிகள்.
எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென்
றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில்
அவ்விதம் நோக்க அவிந்தனவோ நம்
அழகிய நேத்திரங்கள்?
1
திவ்விய அன்பிற் செகத்தையெல்லாம் ஒன்று
சேர்த்திட லாகும் அன்றே? - எனில்
அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்
அத்தனை பேரும் ஒன்றே.
2
ஏகபரம்பொருள் என்பதை நோக்க
எல்லாரும் உடற் பிறப்பே - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
லேஉள்ள தோ சிறப்பே?
3