பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலய உரிமை


(ஆறுமுகவடி வேலவனே கலியாணமும் செய்யவில்லை)

என்ற காவடிச் சிந்தின் மெட்டு.

கண்ணிகள்.

எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென்
றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில்
அவ்விதம் நோக்க அவிந்தனவோ நம்
அழகிய நேத்திரங்கள்? 1

திவ்விய அன்பிற் செகத்தையெல்லாம் ஒன்று
சேர்த்திட லாகும் அன்றே? - எனில்
அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்
அத்தனை பேரும் ஒன்றே. 2

ஏகபரம்பொருள் என்பதை நோக்க
எல்லாரும் உடற் பிறப்பே - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
லேஉள்ள தோ சிறப்பே? 3