பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்புடைமை

271



இல்லாதிருந்தால் அவர் ஒர் அறிவுடைய மரத்துக்குச் சமம் ஆவர்.

அரம்-இரும்பு முதலிய உலோக வகைகளை ஆராயும் கருவி; மக்கட்பண்பு-மக்களுக்கு இருக்க வேண்டிய நல்ல குணம், மனிதத் தன்மை. 997

8.நண்பற்றா ராகி நயம்இல செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.

ஒருவர், தம்முடன் நட்புக் கொள்ளாது நன்மை அல்லாத செயல்களையே செய்யும் பகைவரிடத்திலும் பண்புடையவராக ஒழுகா விட்டால் அவர் இழிந்தவரே ஆவர்.

நண்பு+ஆற்றார்-நண்பாற்றார்; ஆற்றார் - நடந்து கொள்ளாதவர்; நயம்-நன்மை, அன்பு, இனிமை; கடை-இழிந்தவர். 998

9.நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

பிறரோடு கலந்து மகிழ்வோடு பழக முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகமானது பகற்காலத்திலும் இருண்டு கிடப்பதாகவே தோன்றும்.

நகல்-அன்போடு கலந்து உறவாடுதல்; மா-பெரிய; இரு- பெரிய; மாயிறு-மிகப் பெரிய; ஞாலம்-பூமி, உலகம்.

பகலும் இருள்பால் பட்டன்று என்று கூட்டிப் பகற் பொழுதிலும் இருளின் கண் அழுந்திக் கிடக்கும் எனற் கொள்க. 999

10.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

நல்ல குணம் இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம் பயனற்றுப் போவது நல்ல பசுவின் பால், அது வைக்கப் பெற்ற கலத்தின் தீமையால் கெட்டுப் போவது போன்றதாம்.

நன்பால்-நல்ல பசுவின் பால்; கலம்-பாத்திரம்: கலந்தீமை-கலத்தின் தீமை, நன்றாகக் கழுவப் பெறாததால் அழுக்குப் படிந்த செம்பு; திரிந்தற்று-கெட்டுப் போவது போன்றது. 1000