460
திருக்குறள்
இப்படி மெத்தென்ற பாதம், கடினமாகிய தரையிலேயும் கல்லிலேயும் நடக்கமாட்டாது என்பதாம்.
[1]ஆக அதிகாரம் ளகஉக்குக்குறள் சதளஉ௰
இப்பால் 113. காதற் சிறப்புரைத்தல்
என்பது, தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும் தலைமகள் தன் காதல் மிகுதி கூறலுமாம்.
1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்
என்பது, இயற்கைப்புணர்ச்சியினுடைய கடைசியிலே தலைமகன் தன் நயப்பு[2] உணர்த்தியது.
மெத்தென்ற வார்த்தையையுடைய இந்த ஸ்திரீயினுடைய வாலிய[3] பல்லிலே ஊறி வருகிற வாய்நீர் பாலுந் தேனுங் கலந்தாற் போலும் என்றவாறு.
அதிகமாகிய தித்திப்பையுடையது என்பதாம். க
1122. உடம்பொ டுயிரிடை யென்ன மற்றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு
என்பது, பிரிந்து போகப் பயப்பட்டவன் சொல்லுகிறது:
உடம்புக்கும் உயிருக்கும் உறவு எத்தனையுண்டோ அத்தனை யுண்டு, இந்த ஸ்திரீக்கு மெனக்கும் உறவு என்றவாறு.
உடம்புமுயிருங்கூடி யின்பங்களை யனுபவிக்கிறாற்போல, இந்த ஸ்திரீயும் நானும் கூடிச் சுகமனுபவித்தோம்; இவளை விட்டுப் பிரிய மாட்டேன் என்பதாம். உ