452
திருக்குறள்
குணங்களாவன: நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு. ௫
சொல்லப் போகிறது தலைமகள் வசனம்[1]
1126. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங் காத லவர்
என்பது, ஒரு வழித் தணப்பின் கண் தலைமகனைத் தோழி இயற்பழிப்பள்[2] என்றஞ்சி அவள் கேட்கத் தன்னுள்ளே சொல்லியது:
என் காதலர் யான் காணாமாற் பொருள் தேடப் போயினாரென்று நினைத்தாலும், என் கண்களை விட்டுப் போகார்; யான் அறியாமற் கண்ணை மூடினால் வருத்தப்படுகிறது மில்லை; ஆன படியினாலே என்னுடைய காதலர் மெத்த சூட்சும மானவர் என்றவாறு.
இடைவிடாமல் நினைக்கிறதினால் எப்பொழுதும் முன்னே தோன்றுகிற படியினாலே, கண்ணுள்ளே இருக்கிறார் என்றும், மூடினால் போகாரென்றும் கூறினாள். ௬
1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு
மெழுதேங் கரப்பாக் கறிந்து
என்பது, இதுவுமது
காதலர் எப்பொழுதும் என்னுடைய கண்ணிலே இருக்கிற படியினாலே, கண்ணிலே மையிடுகிறது மில்லை; அது ஏன் என்றால் மையிடுகிற நேரமும் அவர் மறைவர் என்றெண்ணி என்றவாறு. ௭