ஜைன உரை
477
தெப்பமாவது நாயகிக்கு நாயகனும், நாயகனுக்கு நாயகியும். ௪
1165. துப்பி னெவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்
என்பது, தூது விடாதது கண்டு தோழியொடு புலந்து சொல்லியது:
இன்பமான காரியத்தைச் செய்வதற்கு உரிய சினேகிதரிடத்திலே துன்பமான பொல்லாங்கைச் செய்யவல்லவர்கள், துன்பஞ் செய்வதற்கு உரிய பகைவரிடத்திலே என்ன செய்வார்களோ என்றவாறு.
தனக்கு உறவாயிருக்கையிலேயும் தன் வாதையைக் கண்டும் தூதனுப்பாமல் இருக்கிறவள், தனக்குப் பகையானால் என்ன செய்வாளோ என்பதாம். ௫
1166. இன்பங் கடன் மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது
என்பது, காமத்தினால் இன்பமுற்றவர்களுக்கு அதனினாய துன்பமும் வரும் என்ற தோழிக்குச் சொல்லியது:
காமம் புணர்வால் இன்பஞ் செய்கிறது கடல் போலப் பெரிதாயிருக்கும்; அந்தக் காமமே புணராமற் பிரிந்தால் அதனாலே வருகிற துக்கம் அந்த இன்பக் கடலினும் பெரிய கடலாயிருக்கும் என்றவாறு. ௬
1167. காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்
என்பது, காமக் கடல் நீந்தப்படும் என்றாட்குச் சொல்லியது:
காமமாகிய கடலை நீந்தாமல் இருக்க வில்லை; நீந்தியும் அதற்குக் கரை காணேன்; அதற்குக் கரைகாணாக் காலம் எல்லாரும் நித்திரை பண்ணுகிற அரையிருள்; அப்பாதி ராத்திரி