ஜைன உரை
481
துக்கப்பட்டு அழுகின்றன என்றவாறு.
காமநோய் பார்வையினால் வந்தபடியினாலே, அதைக் கண்கள் செய்ததாகக் கூறினாள். ௫
1176. ஓவு வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
தாஅ மிதற்பட் டது
என்பது இதுவுமது.
இந்தக் காமநோயினைச் செய்த கண்கள் தாமுந் துயிலாமலழுகிறது மிக நன்று என்றவாறு.
தம்மாலே வருத்தமுற்ற எமக்கு அவ்வருத்தம் தீர்ந்தாற் போன்றது என்பதாம். ௬
1177. உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்
என்பது இதுவுமது
அன்று காதலரை ஆசைப்பட்டுக் கண்டகண்கள், இன்று துங்காமல் அழுங்கலாகிய துன்பத்தினை யனுபவித்துத் தம்முள்ளே யிருக்கிற நீர் அற்றேபோக என்றவாறு.
கண்கள் அழுதழுது நீரற்றுப் போகு மென்பதாம். ௭
1178. பேணாது பெட்டா ருளர்மன்றோ மற்றவர்க்
காணா தமைவில கண்
என்பது, “காதலர் பிரிந்து போனவரல்லர்; அவர் இங்கேதானே யிருக்கிறார்; அவரைக் காணுமளவும் நீ பொறுக்க வேணும்” என்ற தோழிக்குச் சொல்லியது:
மனத்தில் ஆசையில்லாமல் பேச்சு மாத்திரத்தில் ஆசையுடையவர் இங்கேயிருக்கிறார்; அவராலே பலன் என்ன? அவரைக் கண்கள் காணாதமைகின்றன வில்லை என்றவாறு.