ஜைன உரை
499
என்பது. பிரிவாற்றாமல் அழகழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது :
இந்த ஆற்றாமை நம்மிடத்திலேயே நிற்கத் தூரத்தில் போன காதலரை நீ நினைந்து அழுகிறதினாலே, நின் கண்கள் பிரகாசம் அழிந்து[1] முன்னே தமக்கு நாணின மலர்களுக்கு இப்பொழுது தாம் நாணா நின்றன என்றவாறு. க
1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாருங் கண்
என்பது இதுவுமது
பசப் பெய்தன் மேல் நீர் வார்கின்ற நின் கண்கள், நம்மால் விரும்பப்பட்டவரது சேராமையைப் பிறருக்குச் சொல்லுவ போலா நின்றன: இனி நீ பொறுத்திருக்க வேண்டும் என்றவாறு ௨
1233. தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்
என்பது இதுவுமது
காதலர் கூடிய நாள் இன்பமிகுதியாற் பூரித்த நின் தோள்கள் இப்போது அவர் பிரிந்து போனதை யெல்லாரு மறியச் சொல்லுகிறது போலே வாடியிரா நின்றன; இது தகாதென்றவாறு. ௩
1234. பனைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்
என்பது இதுவுமது
அன்றும் நாயகனைப் பிரிந்த தோள்கள், அவராற் செய்யப் பட்ட அழகேயன்றிப் பழைய இயற்கை யழகையும் இழந்து வாடி வளைகள் கழன்று போகா நின்றன என்றவாறு. ௪
- ↑ இழந்து (பரிமேலழகருரை)