ஜைன உரை
505
நம்மைக் கூடாதபடி துறந்து போயினாரை நாம் நம்முள்ளே உடையோமாக, அவரை விட்டுப்பிரியமாட்டாமல் நம் அகக் கவினு[1]மிழப்போம் என்றவாறு.
நம்மைத்துறந்து போயினாரை நாம் மறத்தல் மாட்டேமாதலின், மெய்யழகு அழிந்தது மல்லாமல் நின்ற நிறையும் இழப்போம் என்பதாம். ௰
ஆக அதிகாரம் ளஉ௫க்குக்குறள் சநஉள௫௰
இப்பால் 126. நிறையழிதல்
என்பது, தலைமகள் மறைக்கத்தக்கவற்றை வேட்கை மிகுதியால் மறைக்க மாட்டாமல் வாய்விடுதல்.
1251. காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
என்பது, நானும் நிறையும் அழியாமல் நீ பொறுக்கவேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
நாணமாகிய தாழ்ப்பாளிட்ட நிறை யென்னுங்கதவைக் காம மென்னுங் குந்தாலி பிளந்து போடா நின்றது என்றவாறு.
காம மிகுதியினால் யான் ஆற்ற மாட்டேன் என்றவாறு க
1252. காம மெனவொன்றோ கண்ணின்றென் னெஞ்சத்தை
யாமத்து மாளுந் தொழில்
என்பது[2]
எல்லாரும் தொழிலொழிந்து சும்மா இருக்கிற பாதி இராத்திரியிலேயும், என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றபடியினாலே, காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று தயையில்லாததாய் இருந்தது என்றவாறு. ௨