ஜைன உரை
513
நகை, புணர்ச்சி யின்பத்தால் நிகழ்வது. ௪
1275. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கு மருந்தொன் றுடைத்து
என்பது, இதுவுமது
நெருங்கிய வளைகளை யுடையவள். என்கண் இல்லாத தொன்றனை மனத்திலே நினைத்துக் கொண்டு> அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு, என் மிகுந்த துக்கத்தினைத் தீர்க்கிற மருந்தொன்றுடைத்து என்றவாறு.
மறைத்தற்குறிப்பு - தானும் உடன் போக்கு உட்கொண்டது. ௫
1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
யன்பின்மை சூழ்வ துடைத்து
என்பது[1]
வெகுவாய்ப் பிரியவசனங்கள் சொல்லி மிகவும் சந்தோஷத்துடனே கூடியிருக்கிறது, பிரிந்து போகிற துக்கத்துக்கு நாம் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டிச் செய்கிறது போலும் என்றவாறு.
பிரிந்து போதற் குறிப்பினால் செய்கின்ற தாகலான், இக்கலவி முடிவில் இன்னாதாகும் என்பதாம். ௬
1277. தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினும்
முன்ன முணர்ந்த வளை
என்பது[2]
குளிர்ந்த துறையினை யுடையவன் நம்மை உடம்பினாலே கூடியிருந்தே மனத்தால் பிரிந்தமையை, அவன் குறிப்பால் அறிதற்குரிய நம்மைப் பார்க்கிலும், இந்த வளைகள் முன்னே அறிந்தன என்றவாறு.