தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச்
செய்த
குறள்
1. கடவுள் வணக்கம்*
1. அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு
என்பது
எழுத்துகளுக்கெல்லாம் அகாரவெழுத்து முதலாயிருக்கிறாப் போலே உலகத்துக்கெல்லாம் சருவக்கியனான சுவாமியே முதலென்றவாறு. ௧
2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழா[1] ரெனின்
என்பது
எல்லா நூல்களையும் கற்றாலு மந்த நூல்களுடைய அர்த்தங்களை யறிந்தாலும் நல்ல[2] அறிவினையுடைய சுவாமி பாதங்களைத் தோத்திரம் பண்ணாவிட்டா லவனுக்கு ஒரு பலனுமில்லை யென்றவாறு உ
3. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
என்பது
மலரின்[3] மேலே நடந்த சருவக்கியனுடைய நல்ல பாதங்சளைச் சேர்ந்த பேர்க ளெல்லா வுலகத்துக்கும் மேலாயிருக்கப் பட்ட மோட்சத்திலே போய் ஒரு காலமு மழியாமல் வாழ்வார்க ளென்றவாறு ௩
4. வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டு மிடும்பை யில
- வாழ்த்து என்பது பிறர்கொண்ட பாடம்.