திருக்குறள் வடிவமைப்பில் திருவள்ளுவர் சிந்தனைகள்
(திருக்குறள் உள்ளடக்கம்)
குறள் பெயர்
சான்று
வடிவ அமைப்பு
சீர்கள் அமைப்பு
திருக்குறள் வடிவம்
குறட்பா வகைகள்
சொல்லுக்கு உண்டா சான்று?
- தமிழ் மொழியில் மிகச் சுருங்கிய வெண்பா
யாப்பிற்குக் குறள் வெண்பா என்று பெயர்.
தொல்காப்பியம் இதைக் குறுவெண்
பாட்டிற்குக் களவெழு சீரே என்று குறிப்பிடுவதே தக்கச் சான்றாகும்.
- குறள் இரண்டு வரிகளால் ஆனாது. மேலே
உள்ள வரி நான்கு சீர்களையும், கீழே உள்ள வரி மூன்று சீர்களையும் உடையது.
- குறட்பா ஒவ்வொன்றும் ஏழு சீர்களால் ಅಕಫ
அறம், பொருள், இன்பம் என்ற மூன்று
பால்களால் வடிவமானது; அதனால் திருக்குறளை 'முப்பால் என்றும் கூறுவர்.
திருக்குறள் நூலிலுள்ள மொத்தம் 1330
குறட்பாக்களில், 2,660 வரிகளும், 9310 சீர்களும், 12,000 ஆயிரம் சொற்களும் அடங்கியுள்ளன.
குறட் பாக்களை எழுத்தெண்ணிக் கற்று
அதை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த மேதை டாக்டர் ஜான். லாசரஸ் (Dr. J. Lazarus) என்பவர். திருக்குறளில் 12,000 சொற்கள் இருப்பதாகக் கூறுகிறார் என்று மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், தனது திருக்குறள் அழகும் அமைப்பும்'
என்ற நூலில் அதற்குச் சான்றளிக்கின்றார்.
திருக்குறள் சொற்பொருள் சுரபி' எனும் இந்த நூலின் ஆசிரியர் திருக்குறளிலுள்ள 1330 பாக்களையும், அதிகாரம் ஒவ்வொன்றிலும் உள்ள ஒவ்வொரு குறட் பாவின் சீர்களைச் சொற்கள்ாகப் பிரித்து எழுத்தெண்ணி ஆய்ந்துப் பார்த்ததில் ச. தண்டபாணி