208
6. து.ாது
(இ~ள்) துாய்மையுடைமையும். சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின் கண்ணும் மெய்யுடைமையும் துாதற்கு இயல்பு. (எ-று).
துய்மை-மெய்யும் மனமும் தூயனாதல். இதன் மெய்மையா வது பிறர்க்கு வேண்டிச் செய்யாறு தனக்கு வேண்டிச் செய்தல். சுற்றத்தார் மாட்டும் பொய் கூறாமற் பகைவர் மாட்டும் பொய் கூற வேண்டுதலின், இது பிற்கூறப்பட்டது. துணிவு - துணிந்த பின்பு ஐயம் தோற்றாமல் துணிதல். வழியுரைப்பார் என்பது, அர சன் சொன்ன மாற்றத்தையே சொல்லுதலால். 2
683. நாலார்மு னுரல்வல்லா னாகுதல் வேலார்முன்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
(இ-ஸ்) பல நூல்களையும் கற்றார்முன்னர் அந் நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன் னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லு மவனது இயல்பு,
(எ-று)
68.4. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றின்
செறிவுடையான் செல்க வினைக்கு
(இ-ள்) அறிவும், வடிவும், தெளிந்த கல்வியும் இம் மூன்றி னது அடக்கமுடையவன் வினைக்குச் செல்லுக, (எ-று) .
அறிவு-இயற்கையறிவு. உருவு-வடிவழகு. ஆராய்ந்த-கலை களை அறிந்து ஆராய்ந்ததனால் ஆட்சியான கல்வி. இவையிற் றினது அடக்கமாவது இம்மூன்றினால் வரும் பெருமிதத்தை அடக்கி ஒழுகுதல் . 4
68.5. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தரதுரைப்பாற்
கின்றி யமையாத மூன்று.
(இ-ள்) அன்புடைமையும் அறிவுடைமையும், தெரிந்த சொல் வன்மை யுடைமையும் என்னும் மூன்றும் தூதுரைப்பாற்கு இன்றி யமையாதனவாம், (எ-று).