: 34
படை மாச்சி
764. தார்தாங்கிச் செல்வது தானை தலை வந்த
போர்தாங்குந் தன்மை யறிந்து.
(இ-ள்) முன்வந்த படையைப் பொறுத்து மேற் செல்ல வல்லது படையாவது; அவ்விடத்துற்ற போரினைத் தடுக்கும் இயல்
பறிந்து, (எ-று).
இது, முந்திச்செல்ல வேண்டுமென்பது உம், செல்லுங்கால் இடமறிந்து செல்ல வேண்டுமென்பது உம், கூறிற்று. 4
78.5. கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்திற்கு
மாற்ற லதுவே படை.
(இ-ள்) கூற்றமானது வெகுண்டு மேல் வரினும், சிதறுத
லின்றி எதிர் நிற்கவல்ல வலிமையையுடையது படையாவது, (எ-று).
இது, மாற்றார் மேல் வந்தால் நின்று பொறுக்க வேண்டு
மென் றது. ங்
F
765. உலைவிடத் துறஞ்ச வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது.
(இ~ள்) அரசு கெடுமிடத்து, வழிவந்த படைக்கு அல்லது போர்க்களத்து அழிவு வந்தவிடத்து உயிர்க்கு வரும் ஊறுஅஞ்சாத வன்கண்மை இல்லை, (எ-று).
தொலைவிடம் என்பதனை முன்னே கூட்டுக. மேல்வழிவந்த படை வேண்டும் என்றார்; அதனால் பயன் என்னை என்றார்க்கு, அவர் தமக்குமுன்பு உள்ளார் செயலை நினைப்பார்; ஆதலால் அவர்க்கல்லது படைகெட்டால் நிற்றலரிது என்ற வாறாயிற்று. 5
767. சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமைய
மில்லாயின் வெல்லும் படை.
(இ-ள்) சிறுமை உறுதலும் போகாத்துன்பம் உறுதலும் வறுமையும் இல்லை யாயின் படைவெல்லும், (எ-று).