249
4. தீ நட்பு
(இ-ள்) அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனி
ஆறும் அறிவுடையார் பகைமை கோடி மடங்கு மி க் க நன்மை
இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது. 3
814. 19ருகுவார் போலினும் பண் பிலார் கேண்மை
பெருகலிற் குன்ற லிரிைது.
(இ- ள்) கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்பு ை யரா யிருப்பிலும், குணமில்லாதார் நட்புப்பெருகுமதனினும்
குறைதல் நன்று. (எ- று) .
இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது. 4.
8 5. ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
(இ-ள்) தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை, நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் விழவிடுக, (எ-று).
இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது. 5
816. எனைத்துங் குறுகு த லோம்பன் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.
(இ-ள்) சிறிதும் செறிதலைத் தவிர்க, மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றங் கூறுவாரது நட்பைத் தவிர்க. (எ-று).
இது குற்றங்கூறுவார் நட்புத் தீதென்றது. 6
817. கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
(இ-ள்) பயன்படும் நனவின் கண்னேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாதாம் செய்யுந்தொழில் வேறாக, சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, (எ-று)
இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது. 7