க௦௪
முன்னுரை
வேழ முகவை நல்குமதி தாழா ஈகைத் தகைவெய் யோயே’
(வெல்கெழு குட்டுவனை)இனி, கல்லாடனார் பாடியவை:
‘அரிசி யின்மையின் ஆரிடை நீந்தி
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பணைமுக முகவைக்கு வந்தின் பெரும’
(நெடுஞ்செழியனை)‘வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்பப்
புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
தன்கடைத் தோன்றினும் இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட் டருளி
வறன்யான் நீங்கல் வேண்டி என்னரை
நீல்நிறச் சிதாஅர் களைந்து
வெளியது உடீஇஎன் பசிகளைந் தோனே'
(அம்பர் கிழான் அருவந்தையை)‘முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி
அரிய லார்கையர் உண்டுஇனி துவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
ஈங்குவந் திறுத்தவென் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பில் முதுகுடி’
(பொறையாற்று கிழானை)இனி, இவ்வகையில் பெருஞ்சித்திரனார் பாடியவை.
‘பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென விரைந்திவண்
உள்ளி வந்தனென் யானே’
(குமணனை)‘ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்கவென்
பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்தேந்து மருப்பின் கொல்களிறு பெறினும்