திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனர்
௧௨௭
உண்மைக்கும் பொது அறவியலுக்கும் பொருந்துவனவாக உள்ளனவென்றால், அவை நம் பழந்தமிழ் மரபு நிலைகளினின்றும் அவை பொதிந்து அவற்றைப் பழஞ் சுவடிகளினின்றும் எடுத்து அவர்கள் மொழியில் வடிவப்படுத்திக் கொண்டனவேயாகும் என்க. • அன்பர்கள் அவற்றை நன்குணர்ந்து தேர்ந்து தெளிவார்களாக இதனாலன்றோ, 'மனோன்மணீயம்' யாத்த பேராசிரியர் சுந்தரனார்,
"வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி'
- என்று ஆரியநெறியினும் திருக்குறளை மேம்படுத்திப் பெருமைப்படுத்திக் கூறினார் என்க.
ஆரியவியல் நெறிமுறைகள் - தர்மங்கள் - அனைத்தும் 'மனுதர்மம்' போன்ற நெறிநூல்களிலேயே சொல்லப் பெற்றிருக்கின்றன. அவற்றிற்கும் அடிப்படை வேதங்களே ஆகும். எனவே, அனைத்துத் தர்மங்களுக்கும் வேதங்களே வழிகாட்டிகள். அந்த உண்மையும் அந்த நூல்களிலேயே கூறப் பெற்றுள்ளது. அவற்றை முறையாகப் பார்க்கலாம்.
'வேதங்களில் சொல்லப்பட்ட உண்மைகளே மனுவில்
'வேதத்திற்கு மாறுபட்ட தர்ம(அற) நூல்கள் நரகத்திற்கே
'மக்கள், உலகம் முதலியவை, ஒழுக்கங்கள் - யாவும்
வேதத்தினாலேயே ஏற்பட்டிருக்கின்றன' {{Right|- மனு: (12; 97; 98)
இனி, வேதத்தில் அடிப்படையாக என்ன சொல்லப் பெற்றுள்ளது: வர்ணாச்ரமம், வர்ணவொழுக்கம். அஃதாவது பிரமன் என்னும் படைப்புக்
- "ரிக்வேதம் சதபத பிராமணத்தில் (111-2-1-24) அசுரர்களின் (தமிழர்களின்) மொழி, இலக்கிய நூல்களைத் தங்கள் மொழியில் பெயர்த்தெழுதிக் கொண்ட தேவர்கள் (ஆரியர்கள்) அவற்றைத் தாங்கள் வளர்த்த வேள்வி நெருப்பில் 'ஆகுதி' (படையல் பொருள்) ஆக இட்டு எரித்தது பற்றிய குறிப்பு வருகிறது. அந்நூல்கள் பனையோலைகளில் எழுதப்பெற்றிருந்தன.” - மாலதி செண்டுகே.
(“The Civilized Demons – The Harappans in Rigveda – By Malati J. Shendge. (1977).