திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
௧௩௭
கற்பிக்கப்பெற்ற தொழிலமைப்பு வேறுபாடுகள் பன்னூற்றுக் கணக்கானவை ஆகும், அவற்றுள் கூறப்பெற்றுள்ள சிற்சில தொழிலமைப்பு வேறுபாடுகளைக் காண்க:
'மனு வேதங்களை உணர்ந்த பிரம்ம ஞானி. எனவே அவரால் எந்தச் சாதியார்க்கு எந்தத் தொழில் விதிக்கப்பட்டதோ அது வேத சம்மதமாகும்.'
'அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் முகம், தோள், துடை, பாதம் இவற்றினின்று உண்டான பிராமண, ௯த்திாிய, வைசிய, சூத்திர வருணத்தாா்க்கு, இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்'.
'வேதஞானம், வேதம் ஓதல், ஓதுவித்தல், வேள்விபுரிதல், புரிவித்தல், செல்வம் ஈதல், ஏற்றல் - ஆகியவை பிராமணனுடைய பணி'
'உலகை ஆளுதல், மக்களைக் காத்தல், கொடை, வேள்வி செய்வித்தல், வேதம் பயிற்றுவித்தல், எதனாலும் ஈர்க்கப் படாத திடமனத்தினனாய் இருத்தல் - ஆகியவை கூத்திரியன் தொழில்'.
'செல்வம் தேடுதல், கடல், மலை, கனிப்பொருள், விளைபொருள் வணிகம் செய்தல், ஆநிரைகாத்தல், பயிர்த்தொழில், வட்டித் தொழில் செய்தல் ஆகியவை வைசிகன் தொழில்'.
'பிராமணர், ௯த்திரியர், வைசியர் ஆகிய மூவர்க்கும் மனம் கோணாமல், பொறாமையின்றி அவர்களின் விருப்பப்படி தொண்டு செய்தல் சூத்திரன் தொழில்'
'தன் சாதித் தொழில் விட்டு வேறு சாதித் தொழிலைச் செய்பவனை அரசன் இரை விட்டே ஓட்டவேண்டியது'
'பிராமணர்க்குப் பணிவிடை புரிவதே சூத்திரர் தர்மம்.
சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை'
.