திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௧௯௩
வற்புறுத்தப்பெறும் நிலை என்பது வேறு.
தமிழியல் கற்பு என்பது, தன்னைத்தானே கொண்டு ஒழுகுதல், இயல்பானது குடும்ப நிலையிலேயே மரபுவழி கற்பிக்கப்பெறும் பின்னணி உடையது. திருக்குறளில் சொல்லப்பெற்ற
'நிறைகாக்கும் காப்பே தலை'
- 57.
'தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு'
- 974,
'நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்'
- 154.
'நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்'
- 1025.
'செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்'
- 1039.
'நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்'
- 1254.
என்னும் குறட்பாக்களை ஓர்க,
இவற்றுடன், பிற கழகத் தமிழிலக்கியங்களில் கற்பெனும் திண்மை உறுதி - வலியுறுத்தப்பெறும் சிற்சில இடங்களையும் இங்குக் காண்க
'மாசில் கற்பின் மடவோள்'
- நற் 15:7
'முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்'
- நற் : 142:10
'நன்றி சான்ற கற்பொடு'
- நற் 330:10
‘கடவுள் கற்பின் அவர் எதிர் பேணி'
- குறுந் : 252.4
'அடங்கிய கற்பின் நலம்கேழ் அரிவை'.
குறுந் 338:7
'அருந்ததி அனைய கற்பின்'
- ஐங்: 442:4
'ஆறிய கற்பின் அடங்கிய சாயல்'
- பதிற் 16:10
'அறஞ்சால் கற்பின் ஒண்ணுதல்'
- பதிற் 31:24
'உலகந் தாங்கிய மேம்படு கற்பின்'
- பதிற் 59:8
'காமர் கடவுளும் ஆளும் கற்பின் .... நறுநுதல்'
- பதிற் : 65:9
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்